Sunday, October 31, 2010

Sai Baba-Command Over Power Fire .

நெருப்பை அடக்கி ஆண்டவர்


ஒருமுறை துவாரகாமாயியில் இருந்த துனி என்ற அணையா நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. அது ஒரு மாலை வேளை. பாபா துனிக்கு முன்னால் அமர்ந்து இருந்தார். அப்போது என்னுடைய தந்தையும் அங்கு இருந்தார். அவர் அனு தினமும் மாலை வேளையில் அங்கு வந்து பெட்ரோமாக்ஸ் விளக்குகளை ஏற்றி வைத்தபின் அங்கு அமர்ந்து கொண்டு நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டு இருப்பார். அன்று பாபா எதோ முணுமுணுத்தபடி இருந்தவாறு மேலும் கீழும் நடந்தார். துனிக்கு அருகில் சென்றார். விறகுக் கட்டைகளை எடுத்து துனியில் போட்டார். என் தந்தைக்குப் புரிந்தது இன்று எதோ நடக்கப் போகின்றது.
அந்த கால கட்டத்தில் பாபா இந்துவா, முஸ்லிமா என்ற சந்தேகம் பெரிய அளவில் பலரது மனதிலும் பரவி இருந்தது. என்னுடைய தந்தையும் அதற்கு விதி விலக்கல்ல. திடீரென பாபா அங்கு இருந்தவர்களை திட்டத் துவங்கினார். அவருடைய கோபம் அதிகரிக்க அதிகரிக்க அந்த துனியும் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த நெருப்பின் பிரகாசத்தினால் துவாரகாமாயியே வெளிச்சத்தில் இருந்தது. முதலில் பாபா தன் தலையில் இருந்த துணிக் கட்டை அவிழ்த்து அதில் எறிந்தார். தலை அலங்கோலமாக விரிந்தது. அடுத்து தான் அணிந்து கொண்டு இருந்த காப்னி என்ற சட்டையைக் கயற்றி அதில் எறிந்தார். துனி என்னும் அந்த நெருப்பின் வேகம் இன்னும் அதிகம் ஆயிற்று .

கடைசியாக தான் கட்டி இருந்த வேட்டியையும் எடுத்து அதில் போட தீ இன்னும் கொழுந்து விட்டு எரிந்தது . அவர் அனைவர் முன்னாலும் நிர்வாணமாக நின்றார். அனைவரும் கேட்டும் வகையில் தான் இந்துவா, முஸ்லிமா என பார்த்துக் கொள்ளுங்கள் என உரத்த குரலில் பாபா கத்தினார். அவர் கண்கள் சிவந்து கிடந்தன. அவர் உடலில் இருந்து வெளிவந்த ஒளி பரவி கண்கள் கூசும் வண்ணம் இருந்தது. . அனைவரும் திகைத்து நிற்க வெளியில் இடியும் மின்னலும் பயங்கரமாகத் தோன்றின. பாபாவின் அருகில் செல்ல ஒருவருக்கும் தைரியம் வரவில்லை. ஆனால் பாகோஜி என்ற ஒரு தொழுநோயாளி பாபாவிடம் சென்று அவர் இடுப்பில் ஒரு துணியை சுற்றிவிட பாபாவின் கோபம் தணிந்தது.

பாபா அமைதி அடைந்து 'சட்க' என கூறப்படும் கம்பை எடுத்து துணியின் மீது தட்டி 'அடங்கு, அடங்கு' என்ற அர்த்தம் தரும் வகையில் 'உகி, உகி' எனக் கூற நெருப்பின் வேகம் அடங்கியது . அப்போதுதான் என் தந்தைக்குப் புரிந்தது, பாபா நெருப்பைக் கூட அடக்கி ஆள முடிந்தவர் என்பது. பாபா தான் மரணம் அடையப் போகும் நாளை அதன் மூலம் அறிவித்து விட்டார். அந்த நாள் தசரா எனப்படும் விஜயதசமி தினமாகும். பாபா என்றாவது ஒரு விஜயதசமி அன்று மரணம் அடைவேன் என்பதை அன்று உணர்த்தினார். அது போலவே அவர் 1918 ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தின் அன்று சமாதி அடைந்தார். ஆகவே பாபா எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்பதைப் பார்க்காமால் அவரை முழுமையாக நம்பி வணங்க வேண்டும் என்பதேஇதன் பாடமாகும் .சாயி என்றால் சக்தி ஈஸ்வர் அதாவது கடவுள் என்பது பொருள்.


Click On Link Below To Read.

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.

3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.

4.Live Experience Of Tarkhad Family Chapter 4.

5. Live Experience Of Tarkhad Family Chapter 5.

6. Live Experience Of Tarkhad Family Chapter 6

7.Live Experience Of Tarkhad Family Chapter 7

8.Live Experience Of Tarkhad Family Chapter 8.

9.Live Experience Of Tarkhad Family Chapter 9.

10.Live Experience Of Tarkhad Family Chapter 10.

11. Live Experience Of Tarkhad Family Chapter 11.

12. Live Experience Of Tarkhad Family Chapter 12.

Shri Sai Bhaavni in Tamil. சாயி பவானி


சாயி பவானி
சாயிநாத நீ வாழ்க, உன் புகழ் வாழ்க
இந்த உலகை காப்பவனே நாங்கள் உன்னை வணங்குகின்றோம்
நீ தத்த திகம்பரின் அவதாரம்
மோட்சம் அடைய எங்களுக்கு வழி காட்டு
பிரும்மசதா சங்கருடன் இணைந்துள்ளவர் நீ
தன்னை சரணடைந்தவர்களுக்கு ஆறுதல் தந்து தேற்றுபவர்
என் கண்கள் குளிர எனக்கு காட்சி அளிப்பாயா
எங்களுடைய பாபங்களைக் களைய அருள் புரிவாயா
சாதாரண காபினியே உன் உடை
கைப்பையும், ஒரு பாத்திரமுமே உன் அணிகலன்கள்
வேப்ப மரத்து நிழலில் காட்சி தந்தாய்
புனிதமான ஆண்டியாகவே வாழ்ந்து வந்தாய்
கொடுமை மிக்க இந்த கலியுகத்தில் அவதரித்தாய்
உலக பந்தங்களில் இருந்து விடுதலை தர நீ வந்தாய்
புனித சீரடியே உன் இருப்பிடம்
நீயே அனைத்து அம்சங்களிலும் முக்கிய பகுதி
நீயே திருமூர்த்திகளின் அவதாரம்
உன் கருணை மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் மகிழ்ச்சி தந்ததே
உன் கண்கள் அன்பையும் கருணையும் பொழியும் அல்லவா
துவாரகாமாயி அதிருஷ்டசாலி
அங்குதானே எம் பெருமானின் இருக்கின்றார்
எங்கள் துன்பங்களும் பாபங்களும்
அங்குள்ள புனித துனியின் நெருப்பில் சாம்பலாயின
நிலையில்லா விளக்கு ஒளி போல, என் மனம் உள்ளது
ஓ, எங்களை மேய்பவனே , எனக்கு தன்னம்பிக்கையைத் தா
ஓ, சாயி எனும் கருணைக் கடலே
உன்னை நம்பி லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றார்கள்
அக்னிஹோத்ரி முலே சாஸ்தரி ஆசிர்வதிக்கப் பட்டவர்
உன் காட்சியைக் கண்டு மகிழ்ந்தவர் குரு கோபாலசுவாமி
உன்னுடைய அளவற்ற சக்தியினால்
விஷப் பாம்பு கடித்தும் உயிர் பிழைத்தவர் சாமா
உன்னுடைய வார்த்தைகள் கடும் புயலை கூட தடுக்கும் சக்தி கொண்டது
நீ அமைதிக்கும் சாந்தத்திற்கும் எடுத்துக்காட்டு
அரைத்த கோதுமையை சர்வரோக நிவாரிணியாக்கினாய்
கொடுமையான காலராவை சீரடிக்குள் நுழைய விடவில்லை
ஓ, என் தெய்வமே, சாயிநாதா, உன்னிடம் நான் சரணடைந்தேன்
ஒரு பூச்சிபோல தாமரை மலரான உன் காலடியில் புரள்கின்றேன்
என் வேண்டுகோளை ஏற்று எனக்கு அருள் புரிவாயா
இந்த உலகின் துக்கங்களில் இருந்து எம்மை கரை சேர்ப்பாயா
பக்த பீமாஜி பல துன்பங்களில் இருந்தார்
துன்பத்துக்கு தீர்வு காண போகாத இடங்கள் இல்லை
ஆனால் உன் உதி மட்டுமே அவர் காச நோய்க்கு மருந்தாயிற்று
காகாஜிக்கு வித்தலாவின் தரிசனம் தந்து மகிழ்ச்சி தந்தாய்
விட்டலாவின் தரிசனம் கிடைக்க அருளும் புரிந்தாய்
தாமுவுக்கு குழந்தை பேரு தந்தாய்
உன்னுடைய அற்புதச் செயல்கள் விதியைக் கூட மாற்றும்
கருணைக் கடலே, எங்களுக்கு அருள் புரிவாயா
எங்களிடம் உள்ள அனைத்தையும் உன்னிடம் தந்துவிட்டோம்
ஓ சாயிநாத, எங்களுக்கு அமைதியையும் மோட்சத்தையும் தருவாயா
முட்டாள் மேக்ஹா ஜாதி புத்தியைக் காட்டினார்
முஸ்லிமை வணங்க முகம் சுளித்தார்
ஆனால் நீயோ சிவனாக அவருக்கு காட்சி தந்தாய்
உன்னுடைய அன்பு அவரை உன் பக்தனாகவே மாற்றியது
தண்ணீரை விளக்கு எரியவைக்கும் எண்ணெயாக மாற்றினாய்
அதன் மூலம் கர்வத்தை அழித்து மாயையை அழித்தாய்
அதிசய செயல் காட்டி விற்பவனை அதிர்ச்சி அடையச் செய்தாய்
வாயடைத்து நின்றவர்கள் உன்னிடம் சரண் அடைன்தனரே
பெண் குதிரையைத் தேடி அலைந்த சாந்த் படேலுக்கு
மாணிக்கக் கல் போன்ற பரதேசி நீ கிடைத்தாய்
உன்னால் பாதுகாக்கப்படும் பக்தர்கள் அதிஷ்டசாலிகள்
பொறுமையுடன் சாயி மீது இதயபூர்வமான பக்தி வை
விடாமுயற்சியோடு அவர் நாமத்தைப் பாடி வர
அவருடைய தாமரை பாதங்களை நம் இருதயத்தில் வைத்திருக்க
அவர் கருணையினால் நம் எண்ணங்கள் நிறைவேறும்
பவாஜா பாயியின் கடன்களை நீ திருப்ப
மரணத்தின் தறுவாயில் இருந்தவர் உயிர் பிழைத்தார்
மரணத்துடன் போராடிக்கொண்டு இருந்த தாத்யாவுக்கு
மறு உயிர் தந்து பிழைக்க வைத்தாய்
விலங்கினங்களும் உன் கருணையைப் பெற்றதல்லவா
அவைகளுக்கும் அன்பும் கருணையும் காட்டினாய்
நீ எங்கும் நிறைந்தவர், நீயே சக்திசாலி
அனைத்து இடங்களிலும் உள்ளவன் நீ என்பது, பக்தர்களுக்குப் புரியும்
உன் தாமரை மலர் போன்ற பாதங்களில் சரண் அடைந்தவர்களுக்கு
வாழ்கை இனிதாக இருக்கும்
அமிர்தம் போன்ற உன் போதனைகள் விலை மதிப்பிலாத முத்துக்கள்
தாய் ஆமையைப் போல எம்மை காப்பாற்றுகின்றாய்
ஒவ்வொரு அணுவிலும் நீ இருக்கிறாய் சாயிநாதா
உன்னுடைய ஒப்பிலா சக்தி எல்லை அற்றது
நான் இதுவரை மூடனாக இருந்ததற்கு நானே காரணம்
என்னால் உன்னுடைய பெருமையைப் பாட முடியவில்லையே
எளியவருக்கும், ஏழைகளுக்கும் நீதானே அடைக்கலம்
இந்த பூமியில் நீ அவதரித்தது எம்மை காப்பாற்றத்தானே
ஓ, சாயினாதா எனக்கு தயை புரிவாயா
உன்னை விட்டு விலகாமல் இருக்க கருணை புரிய வேண்டும்
உயிருள்ளவரை உன் புகழையே பாடிக்கொண்டு இருக்க வேண்டும்
உன் அற்புதங்களை உயிர் உள்ளவரை கூறிக்கொண்டே இருக்க வேண்டும்
பொறுமையுடனும் பக்தியுடனும் உன் நாமத்தை ஜெபிப்பவர்கள்
மன அமைதியும் விமோசனமும் பெறுவார்கள்
சாயி பவானியை தூய மனதுடனும் பாடிவா
அவர் காலடியில் விழுந்து அவரை பூஜித்துவா
துன்பத்தில் இருந்தும் துயரத்தில் இருந்தும் காப்பாற்ற
தன் உண்மையான பக்தர்களின் பக்கத்திலேயே சாயி இருப்பார்
நமக்கு ஆறுதலைத் தரும் மார்கம் சாயி பக்தியே
அவரே கடவுள், அவரே உலகை ஆட்டிப் படைப்பவர்
எவர் ஒருவர் உண்மையான பக்தியில் மூழ்கி விடுவார்களோ
அவன் வேறு எதற்கும் கவலைப்பட தேவை இல்லை
சாயிநாதரின் கருணைக்கு அளவே இல்லை
அமைதியின் நீர் தேக்கம் சாயிநாதர்
மும்மூர்த்திகளின் அவதாரமே, உன் புகழ் வாழ்க
சாயியை வணங்குவோம், என் தெய்வமே நீ வாழ்க

Datta Bhavani In Tamil.


இந்த தத்த பவானி பற்றிய செய்தி சாயி விரத புத்தகத்தில் உள்ளது. தத்த பவானி , சாயி பவானி, சாயி சாலிசா, சாயினாதரின் பதினோரு உறுதி மொழிகள் மற்றும் சாயி ஆரத்தி போன்ற அனைத்தும் சாயி விரதத்தில் உள்ளது. எனவே இதை பக்தர்களின் நலனுக்காக வெளியிடுகின்றேன்.
மனிஷா
தத்த பவானி


பெருமை மிக்க யோகேச்வரான தத்த திகம்பரா
எங்களை பாதுகாத்து ரட்சிக்க வந்தவர் நீ
கற்புக்கரசி அனுசூயாவும் அத்ரி முனிவரும் காரணகர்தர்களே
உன் அவதாரம் எந்த உலகை பாதுகாக்கவே
நீயே பிரும்ம-விஷ்ணு மற்றும் சிவனின் அவதாரம்
பக்தி சிரத்தையுடன் உன்னை சரணடைந்தவர்களை காப்பவர்
நீயே அறிவு, ஆனந்தம், வாழ்கை மற்றும் தெய்வம்
கம்பீரமான கைகளை கொண்ட மாபெரும் சத்குரு
கையில் பையை வைத்துக் கொண்டு அன்னபூரணியாக உள்ளாய்
புனிதக் கமண்டலம் உள்ள உன் கைகள் அமைதியை தருகிறதே
உன் உருவம் நான்கு என்றும் ஆறு என்றும் பல கைகளைக் கொண்டவர் என்றும் கூறுகின்றனரே
உன் பரந்த தோள்களுக்கு எல்லையும் உண்டோ
தெய்வமே, நான் உன்காலடியில் சரண் அடைந்து விட்டேன்
திகம்பரா, என்னை காப்பாற்று இல்லை எனில் என் வாழ்வை முடித்து விடு
சஹசார்ஜுனனின் தவத்தை மெச்சி காட்சி தந்தவனே
அவனை பாதுகாத்து மன அமைதியும் தந்தவனே
அளவற்ற செல்வமும் சக்தியும் அவனுக்கு தந்தவனே
இந்த உலகில் இருந்து விடுதலை தந்து விமோசனமும் தந்தாயே
இந்த அபலையின் குரல் உன் காதில் விழவில்லையா
நீயே எனக்கு ஆறுதல் தருபவர் , பாதுகாவலர்
விஷ்ணு சர்மாவின் பக்தியை மெச்சி
அவர் வீட்டு சிரார்த்த சமையலை உண்டாயே
அசுரன் ஜம்பதைத்யன் தேவலோக கடவுட்களை தாக்க
நொடிபொழுதில் அவர்களுக்கு உதவ ஓடினாய்
உன் அற்புத சக்தியினால் அசுரனை பொறியில் சிக்க வைத்தாய்
இந்திரனைக் கொண்டு அவனை வதம் செய்து தேவலோகத்தைக் காத்தாய்
உன்னுடைய அற்புதச் செயல்கள் அளவற்றவை
ஓ, சிவபெருமானே உன்னுடைய அற்புதங்களை எப்படி விவரிப்பது?
ஆயுசூனின் துயரங்களைத் துடைத்தாய்
வாழ்நாள் முழுவதும் தேவைகளே இல்லாத நிலையைத் தந்தாய்
சத்யதேவா, யது, பிரஹலாத் மற்றும் பரசுராமனுக்கு
மன விடுதலைத் தந்து ஞானமும் தந்தாய்
உன் கருணை ஈடு இணை இல்லாதது
என்னுடைய வேண்டுகோளை ஏற்க ஏன் மறுக்கின்றாய்
என்னை பாதியிலேயே கைவிட்டு சோதிக்காதே
ஓ, தெய்வமே எனக்கு கருணை காட்டாமல் இருக்காதே
அம்பிகாவின் பக்தியையும் அன்பையும் மெச்சி
அவளுக்கு மகனாகவே பிறந்து அருளினாய்
சமர்தரே , கலியுகத்தில் ரக்ஷகராக அவதரித்தவரே
சாமான்ய சலவையாளிக்கு கருணை புரிந்தாய்
பிராம்மினியின் வயிற்று உபாதையைத் தீர்த்தாய்
கொல்லபட்ட வல்லபேஷுக்கு உயிர் தந்தாய்
தேவா, என்னை ஒருமுறையாவது பார்ப்பாயா,
ஒன்றும் அறியாத என்னை காப்பாற்று
பட்டுப்போன மரம்கூட உன் அருளினால் துளிர் விட்டதே
என்னை பரிதவிக்க விட்டு சோதனை செய்யாதே
வரண்டு போன கங்கை நதிக்கு உயிர் தந்தாய்
மீண்டும் பெருகி ஓட அருள் செய்தாய்
நந்தினியின் வெண் குஷ்டம் உன்னாலே மறைந்தது
அவருடைய அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினாய்
மலட்டு எருமையை படிக் கணக்கில் பால் சுரக்க வைத்தாய்
உன் கருணையால் அவன் போண்டியாகாமல் தப்பினான்
சாதாரண அவரையை பிச்சையாகப் பெற்றாய்
அதன் பலன் அவன் கைகளில் தங்க குடுவை கிடைத்தது
சாவித்ரியின் இறந்த கணவனுக்கு உயிர்பிச்சை தந்தாய்
அந்த விதவையின் கண்ணீர் துடைக்கப்பட்டது
கங்காதரின் மகனை உயிர் பிழைக்க வைத்தாய்
உன் கருணையினால் பூர்வ ஜென்ம பாபங்கள் விலகுகின்றன
தலைகனம் பிடித்த மதோன்மத்தின் தலைகனத்தை அழித்தாய்
பக்த திருவிக்ரமா உன் அருளினால் காப்பாற்றப்பட்டார்
பக்த தான்துக் உன் அருளினால் ஸ்ரீஷைலத்தை அடைந்தார்
உன்னால்தானே நொடிப் பொழுதில் மகாதேவரை சந்திக்க முடிந்தது
உன் பக்தர்களை எட்டு வகையாகப் பிரித்தாய்
ஆனால் நீயோ உருவமற்றவர் , எல்லையும் அற்றவர்
அனைத்து பக்தர்களையும் சரிசமமாகப் பார்கின்றாய்
உன்னைக் காண்பதில் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள்
யவன மன்னனின் தீராத துயரங்களைத் துடைத்தாய்
ஜாதி பேதம் மதம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவன் நீ
நீ செய்த அற்புதங்கள் கணக்கில் அடங்காதவை
ராமன் மற்றும் கிருஷ்ணா அவதாரங்களில்
கணக்கற்ற மனிதர்களையும் விலங்கினத்தையும் காத்தருளினாய்
காக்கப்பட்ட பறவைகளும், வேடர்களும், பெண்களும் விலங்கினங்களும் புண்ணியசாலிகள்
பொய்யிலே வாழ்பவன் கூட உன் பெயரை உச்சரித்த மட்டில் பாபத்தை துறக்கிறான்
முடியாதவைகள் கூட உன் பெயரை உச்சரித்த மட்டில் எளிதாக முடிகின்றது
உன் நாமம் (சிவன்) துயரங்கள் விலகப் போதுமானது
உடலின், உள்ளத்தின் துயரங்கள் உன் நாமத்தைக் கூறினாலே விலகி ஓடும்
உன் பெயரைக் கேட்டதுமே அனைத்து தீமைகளையும் அழிந்துவிடும்
பேரானந்தம் உன் நாமத்தைக் கூறும்போதே கிடைகிறது
பக்தர்கள் கூறும் உன் நாமம் காற்றிலே மிதக்கும்போதே
பேய் , பிசாசு, தீமைகள் என அனைத்தும் விலகி ஓடிவிடும்
ஊதுபத்தி ஏற்றி எவன் ஒருவன் தத்த பவானியை படிக்கிறானோ
ஒளிபோல அவனை சுற்றி நீ காக்கிறாய்

தூய்மையுடன் துதிப்போர்க்கு மகிழ்ச்சி கிட்டும்
உலக வாழ்வும் சரி, மேல்லுலகிலும் சரி பேரானந்தம் கிடைக்கும்
தத்த பவானியை படிப்பதின் மூலம் சித்தி கிடைக்கும்
ஏழ்மை விலகும், துயரங்களை எதிர்கொள்ளலாம், வளம் பெருகும்
எவர் ஒருவர் தத்த பவானியை 52 வாரங்களுக்கு 52 முறை
52 வியாழக் கிழமைகளில் பக்தி பூர்வமாக படிப்பானோ
அவனை யமராஜர் நிச்சமாக தண்டிக்க மாட்டார்
தினமும் அவர் நாமத்தை சொன்னால் விபத்துகள் வராது
தத்த திகம்பர் பல ரூபங்களைக் கொண்ட ஒரே கடவுள்,
தத்தர் ஆயிரம் பெயர்களைக் கொண்டவர்
தீயைப் போன்ற தூய்மையானவர் தத்ததேவர்
ஓ, தத்தா நாளும் பொழுதும் நான் உன்னையே வணங்குகின்றேன்
உன் மூச்சில் இருந்து வந்தவையே வேதங்கள்
உன் பெருமையை சேஷ நாகத்தினால் கூட பாட முடியவில்லை
அப்படி இருக்க மூடன் என்னால் எப்படி உன் பெருமையை கூற முடியும்
உன்னை பிரார்திப்பதினால் மனதுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிடைகின்றது
உன்னை புரிந்து கொள்ளாதவர்கள் இருட்டிலே வாழ்பவர்கள்
தத்தா நீயே உண்மை கடவுள், சர்வ வல்லமை படைத்தவர்
முழு மனதோடு குருதேவரான தத்தரின் பெருமையைப் பாடுவோம்

சீரடி சாயிபாபா ஆலயம், பெங்களூரு

அன்பானவர்களே
நான் பாபாவின் தளத்தில் என்ன மாறுதல் செய்ய வேண்டும் என நினைகின்றேனோ அதற்கு முன்பே பாபா அதை தான் நினைத்து விடுகின்றார் என்பது உண்மையாகிவருகின்றது. நான் பாபாவின் ஆலயத்தை பற்றி இணையதளத்தில் வெளியிட அதற்குத் தேவையான செய்திகளை சேகரித்தாலும் தேவையான அளவு கிடைக்காமல்இருந்தது. அப்போது நான் முன் பின் அறிந்திடாத ஒரு ஆலயத்தைப் பற்றி பாபாவின் பக்தர் ஒருவர் எழுதி அனுப்பி இருந்தார். அதை படித்த நான் பிரமித்து நின்றேன். பாபாவின்பல பக்தர்களும் தமக்கு கிடைக்கும் விவரங்களை அனுப்பினாலும் எது வெளியாக வேண்டும் என்பதை பாபாவேதான் தீர்மானிக்கின்றார்.
பாபாவுடன் பன்னிரண்டு வருட காலம் இருந்த சிவம்மா தாய் என்பவர் ஒரு ஆலயத்தைக் கட்டி உள்ளார். அவருடைய அனுபவத்தைப் பற்றிப் படிக்கையில் கண்கள்பனிக்கின்றன. பேச வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றது. இதோ ராமராவ் என்பவர் அது குறித்து தமிழில் இருந்த செய்தியைப் படித்துவிட்டு நமக்கு ஆங்கிலத்தில் எழுதிஅனுப்பி உள்ளார். அதை படியுங்கள்.
( இந்த கட்டுரை ஆங்கிலத்தினை தழுவி எழுதப்பட்டது)
மனிஷா




சாயிபாபாவின் தீவீரமான பக்தை சிவம்மா தாயீ
பிறப்பு :- மதியம் ஒரு மணி - 16 .05 .1891
இடம்: தமிழ்நாட்டில் கோயம்பத்தூர்
சமாதி: 1994
வாழ்ந்த காலம் : 103 வயது வரை
உண்மையான பெயர்: ராஜம்மா
பாபா வைத்த பெயர் : சிவம்மா தாயீ
தந்தை: வேலைப்ப கவுண்டர்
தாயார் : புஷ்பவதி அம்மாள்
கல்வி: மூன்றாம் வகுப்பு வரை- தமிழ் மட்டும் தெரியும்
திருமணம்: அவருடைய பதிமூன்றாம் வயதில், மார்ச் மாதம் 1904 ஆண்டில்
கணவர்: சுப்ரமணிய கவுண்டர்
மகன்: மணிராஜ்

ராஜம்மா என்ற சிவம்மா தாயீ கூறிய செய்தி

''அவருடைய மாமன் சீரடியில் இருந்து சாயிபாபாவை ஒரு முறை பொள்ளாச்சியின் அருகில் இருந்த கிராமத்துக்கு அழைத்து வந்தார். அப்போது ராஜம்மாவின் வயது பதினைந்து, அவளுடைய மகனுக்கு ஒரு வயது. பாபா அப்போது எழுபத்தி ஒரு வயதானவர் ( நமக்கெல்லாம் பாபா சீரடியை விட்டு வேறு எங்கும் சென்றது இல்லை என்பது தெரியும். என்றாலும் அவர் வந்ததாக கூறுவதை ஏற்காமல் இருக்க முடியவில்லை. காரணம் , பாபா அனைத்து இடங்களிலும் இருப்பவர்).
அங்கு வந்த பாபா அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். அப்போது அவளுடைய காதில் காயத்தரி மந்திரத்தை ஓதியதும் இல்லாமல் அதை ஒரு காகிதத்தில் எழுதியும் தந்தார். ஒரு நாள் அந்த காகிதம் காணாமல் போய் விட்டது. அவளுடைய கனவில் பாபா வந்து அது அரிசி வைத்துள்ள பாத்திரத்தில் உள்ளது என அது இருந்த இடத்தைக் காட்டினாராம். அது முதல் அவள் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசிக்க வேண்டும் என்ற முடிவு செய்தாள். அங்கு செல்ல அவள் தன்னுடைய கணவரின் அனுமதியைப் பெற வேண்டி இருந்தது. அவரோ அதில் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் பாபா அவருக்கு ஏற்படுத்திய ஒரு அதிசயச் செயலினால் அவரும் பாபாவின் பக்தரானார். அவளை அவளுடைய கணவர் 1908 ஆம் ஆண்டு அவளுக்கு பதினேழு வயதானபோது சீரடிக்கு அழைத்துச் சென்றார். பாபா அவளிடம் தமிழில்தான் பேசினார்.
பாபாவைப் பற்றி சிவம்மா கூறினார் , ''பாபாவின் உயரம் ஆறு அடி , அவருடைய கைகள் நீண்டவை. கையை கீழே தொங்கப் போட்டால் அவருடைய விரல்கள் கால் முட்டியை தாண்டிச் சென்றன. அவருடைய கண்கள் கருமை நிறம் கொண்டவை அல்ல. நீல நிறமானது. புலி மற்றும் பூனைகளின் கண்களைப் போல ஜொலித்துக் கொண்டே இருக்கும். அவரிடம் தேஜஸ் இருந்தது. அவரைக் கண்ட உடனேயே கடவுளே அவருடைய உருவில் வந்துள்ளதை உணர்ந்தேன். அவர் சமையல் செய்வதை விரும்பியவர். உணவை மற்றவர்களுக்கும் கொடுத்தவர். நான் அங்கு சென்று இருந்தபோது ஒரு பாத்திரத்தில் அரிசி கஞ்சி வெந்து கொண்டு இருந்தது. நாங்கள் குடும்பத்தினருடன் அங்கு இருந்தோம். அப்போது பாபா தனது காபினியை மடித்து விட்டுக் கொண்டார், கரண்டிகளை எடுக்காமல் தனது கையை கொதித்துக் கொண்டு இருந்த கஞ்சி பாத்திரத்தில் விட்டு அதை கலக்கினார். பிறகு அதை அனைவருக்கும் தந்தார்''
நாங்கள் சீரடியை விட்டு திரும்பி வந்ததும் என்னுடைய கணவர் ஒரு நாள் நாளிதழில் ஒரு மில்லில் சூபர்வைசர் பதவி காலியாக உள்ளது என்பதைப் பார்த்து விட்டு அதற்கு விண்ணபித்தார். வேலை கிடைத்து விட்டது. நாங்கள் பெங்களூருக்கு வந்து விட்டோம். நான் அங்கிருந்த போது வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சீரடிக்குச் செல்வேன். அதை என்னுடைய கணவர் விரும்பவில்லை. அது குறித்து அவர் என்னைக் கேட்டபோது நான் கூறுவேன் ' பாபாவே எனக்கு குரு, மற்ற கடவுட்கள் அல்ல ஆகவே நான் அவரைக் காண போக வேண்டும்'
அவர் கேட்டார் எதனால் அவர் உனக்கு குருவானார்? நான் கூறினேன் ' அவர் கடவுளின் அவதாரம். என் ஹிருதயத்தில் இருப்பவர் . ஆகவே அவரைப் பார்க்க வேண்டும் என இதயத்தில் தோன்றும்போது அவரை காணச் செல்கின்றேன்'
அவர் அதனால் என்னுடன் மனத்தாங்கல் அடைந்தாலும் நான் சீரடிக்கு வருடத்துக்கு மூன்று அல்லது நான்குமுறை செல்வதை நிறுத்தவில்லை. அங்கு சென்று சில நாட்கள் இருந்து விட்டு வருவேன். பாபா என்னை தன்னுடைய மகளைப் போல கருதி அன்பு செலுத்தினார். அவருடைய பல அற்புதமான லீலைகளை நான் அருகில் இருந்து கண்டிருக்கின்றேன். அதனால் எனக்கு குடும்ப வாழ்கையில் விரக்தி ஏற்பட்டது.
பாபா செய்த கண்ட யோகத்தை பார்த்து இருகின்றேன். (அது பற்றி சாயி சரித்திரத்தில் உள்ளது) . அதை செய்யும்போது பாபாவின் கால்களும், கைகளும் வெட்டப் பட்டு மசூதிக்கு வெளியில் கிடக்கும். அதை தாண்டித்தான் செல்ல வேண்டி இருந்தது. பாபா பூர்வ ஜென்ம கதையான பாம்பும் கீரியும் கதையைக் கூறியபோது அவள் அவர் பக்கத்தில் இருந்துள்ளார். (அது பற்றி சாயி சரித்திரத்தில் உள்ளது). பாபா செய்த தௌடிய யோகாவையும் அவள் பார்த்து உள்ளாள். தான் யோகாவை செய்யும்போது அவளை மசூதிக்கு வெளியில் இருந்த கிணற்றின் பக்கத்தில் அழைத்துச் சென்று அதை செய்து காட்டுவாராம்.
அப்படியே சென்று கொண்டிருந்தவளின் வாழ்கையைக் கண்டு வெறுத்துப் போன அவருடைய கணவர் அவளை விட்டு விலகிச் சென்று விட்டு வேறு திருமணம் செய்து கொண்டு விட்டார். அவளுடைய மகன் மணிராஜ் காவல்துறை இன்ஸ்பெக்டராக ஆனார். விரைவிலேயே அவரும் அவருடைய மனைவியும் ஒரு விபத்தில் சிக்கி பலியானார்கள். அவளுடைய கணவர் அவளை விட்டு விலகியவுடன், அவளுடைய தந்தை அவளை சீரடியில் அழைத்துச் சென்று பாபாவிடம் விட்டார். பாபா அவளை இனிமேல் அங்கேயே தங்கிக்கொண்டு ( ஒரு பக்தரின் வசிக்கும் விடுதியில்) தன்னை தியானித்துக் கொண்டு காலத்தை கழிக்குமாறு கூறிவிட்டார்.
பாபாவோ 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதியன்று மகா சமாதி அடைந்து விட்டார். சிவம்மா தாயீ கூறினார். பாபா சிவனின் அவதாரம் . அவரே 1917 ஆம் ஆண்டில் அவளுடைய பெயரை சிவம்மா தாயீ என மாற்றினார். பாபா அவளை பெங்களூருக்குச் சென்று அங்கு தன்னுடைய பெயரில் ஆசிரமம் அமைக்குமாறும் அதற்கு தன்னுடைய ஆசி உண்டு என்றும் கூறினாராம்.

ஆசிரமமும் ஆலாயமும் வந்த கதை

சிவம்மா தாயீ பெங்களூருக்கு வந்து பிட்சை எடுத்துக் கொண்டு வாழ்ந்தாலும் பாபாவின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தாள். 1944 ஆம் ஆண்டு நாராயண ரெட்டி மற்றும் சாரதாமா என்பவர்கள் அவளுக்கு பெங்களூரில் இருந்த மடிவாடாவில் சிறிது நிலம் தந்தனர். அவள் அங்கு அமர்ந்து கொண்டு உணவு இன்றி பன்னிரண்டு வருடம் தபம் இருந்தார். அவளைச் சுற்றி கரையான் புற்று எழுந்து அவளை மூடி விட்டது. அவளுடைய தலையில் ஒரு பாம்பும் வசித்து வந்தது. ஒரு நாள் அவளுடைய பக்தர்கள் அந்த இடத்தில் சென்று, லாவகமாக அந்த பாம்பை அங்கிருந்து அகற்றி விட்டனர். அவளிடம் அந்த தபத்தை முடித்துக் கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அவளும் தவத்தை நிறுத்திவிட்டு பாபாவின் நாமச்கரனத்தை உச்சரித்து வந்தாள். 1973 ஆம் ஆண்டு ஒரு ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் பாபாவுக்கு ஒரு ஆலயம் கட்டினாள். அது 1991 ஆம் ஆண்டில் ஒரு உயர் நிலைப் பள்ளிக்கூடம் ஆயிற்று.

பல பக்தர்களும், அவளுடைய பேரன் பேத்திகளும் அவளை வந்து தரிசனம் செய்துவிட்டுச் சென்றனர். அவளுடைய உறவினர் பலரும் பணம் படைத்தவர்கள். ஆகவே அவளை ஊருக்கு வந்து வசதியாக இருக்குமாறு கூறினார்கள் . அவள் அதை நிராகரித்துவிட்டாள்.
1993 ஆண் ஆண்டு அவள் கூறினாள் '' என்னுடைய சமாதி பாபாவின் ஆலயத்துக்குள் அமைக்கப்பட்டு உள்ளது . என்று பாபாவும் நானும் விரும்புகின்றோமோ அன்று என் ஜீவன் இல்லாத உடல் மட்டுமே இங்கு இருக்கும். அதை அடுத்து அந்த குழிக்குள் போட்டு மூடி விட வேண்டும். பாபா தான் சமாதி அடைந்த பின்னரும் எனக்கு வழி காட்டிகொண்டு இருக்கின்றார், அன்பு செலுத்துகின்றார், உதவி செய்கின்றார். என்னுடைய ஒவ்வொரு மூச்சுக் காற்றும் அவருடையதுதான். அவர் சூக்ஷ்ம சரிரத்தில் இருந்தாலும் என்னுடன் தொடர்பு வைத்துக் கொண்டு உள்ளார். அடிக்கடி என்னை வந்து சந்தித்துவிட்டுச் செல்கின்றார். கூற வேண்டியதைக் கூறி தேவையான நேரத்தில் எச்சரிக்கையும் தருகின்றார். ''
அவள் அந்த ஆசிரமத்தில் பாபாவுக்கு இரண்டு ஆலயங்களை எழுப்பினாள். ஒன்றில் பாபா கருப்பு நிறத்தில் உள்ள சிலையாகவும் இரண்டாவதில் பாபா பிட்சை எடுக்கும் கோலத்திலும் உள்ளார். அது போன்ற கோலத்தில் அவர் உள்ளதை வேறு எங்குமே பார்த்திருக்க முடியாது. ராஜஸ்தானில் இருந்து வந்த சிற்பியைக் கொண்டு தனது கனவில் பாபா தோன்றிய அதே காட்சியிலேயே, செய்யுமாறு பாபா உத்தரவு தந்தபடியே பளிங்கு கல்லில் அந்த சிலையை செய்தார். சிவம்மாவின் பூஜை அறையில் வெள்ளியினால் செய்த பாபாவின் சிலையை வைத்து உள்ளார்.
அவளிடம் வந்து தமக்கு ஏற்படும் துயரங்களை கூறி பரிகாரம் கேட்டால் அவள் பாபாவிடம் கேட்டு அவர் கூறிய நிவாரணத்தை செய்யக் கூறுவாராம். ஆனால் அவர் அனைவருக்கும் அதை செய்தது இல்லை. எவருக்கு அதிருஷ்டம் இருந்ததோ அவர்களுக்கு அவளுடைய அறிவுரை கிடைத்தது.
அவள் கூறுவார் '' நான் என்னுடைய குருவுக்கு முன்னால் ஒரு தூசி. அவர் இல்லாமல் நான் இல்லை. என்னிடம் வந்து அறிவுரை கேட்கும் பக்தர்களுக்கு நான் தரும் அறிவுரைகள் என்னுடையவை அல்ல, அவை அனைத்தும் என் பாபா தந்தது ''
சம்பங்கி என்பவர் அறுபது வருடங்களாக அங்கு இருந்து வந்துள்ளார். அவரே இன்று ஆலயத்தில் பூஜைகளை கவனிகின்றார். அவளுடைய மகிமைகள் பல உள்ளன என்கின்றார் அவர்.
சிவம்மா தாயீ இருந்த போது அவர் ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து இருந்தார். அவர் மறைந்தவுடன் சில விஷமிகள் அந்த மரத்தை அடியோடு வெட்டிவிட்டு மீதம் இருந்ததின் மீது தீ வைத்துக் கொளுத்தி விட்டனர். அதனால் வேதனயுட்ற சம்பங்கி அந்த பட்டுப் போன மரத்தின் கீழ் பகுதியில் பாபாவுக்கு அர்ச்சனை செய்த தண்ணீரை விட்டு வந்தார். அந்த பட்டுப் போன மரம் துளிர்விட்டு மீண்டும் வளரத் துவங்கியது. அந்த புதிய மரமே கீழே உள்ள படம்.

அந்த ஆலயத்துக்குச் சென்ற பாபாவின் பக்தரான ரமாராவின் அமெரிக்காவில் வசிக்கும் மருமகன் தந்த தகவல்:

'' நான் அந்த ஆலயத்தில் நுழைந்தேன் . கரிய நிறத்தில் தங்கம் போல மினுக்கும் கண்களுடன் பாபா காட்சி தரும் அந்த சிலையைப் போல வேறு எங்கும் பார்க்க முடியாது. அந்த சிலை இரண்டாவது அறையில் உள்ளது. அங்கு எழுபது ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு பூசாரியாக உள்ளவரே எனக்கும் சிவம்மா தாயீ பற்றிய பல விவரங்களைக் கூறினார். 1889 ஆம் ஆண்டு பிறந்தவர் 1994 ஆம் ஆண்டில் சமாதி அடைந்தாராம். திருமணம் ஆன அவர் தனக்கு மகன் பிறந்த பிறகே ஆன்மீக வாழ்வில் சென்று உள்ளார். பாபாவிடம் இருந்து நேரடியாக உபதேசம் பெற்றவர். அவளுடைய சமாதி பாபாவின் சிலைக்கு அடியில் உள்ளது. அந்த அறை மிகவும் சிறியதாக உள்ளது. அதற்கு பக்கத்திலேயே சாவடியும் உள்ளது. அதில்தான் சிவமா தாயீ வாழ்ந்து வந்துள்ளார். சாவடிக்கு அருகில் உள்ள துவாரகாமயியில் ள்ளஉள்ள நிற்கும் பாபாவின் சிலையின் கையில் பிட்சை பாத்திரம் உள்ளது. அனைத்து அறைகளிலும் அந்த அன்னையின் பொருட்களும், பாபாவின் படங்களும் உள்ளன. ஆனால் துனி மட்டும் காணப்படவில்லை.
பாபாவின் சிலைக்கு நேராக நந்தி சிலை உள்ளது. நவகிரகங்களும் உள்ளன. ஆலயத்தின் வெளியில் நான்கு சமாதிகள் உள்ளன. அவை அவருக்கு உதவினவர்களின் சமாதிகளாம்.

Release Of The Miracle Book Tamil Edition.

Dear all,
Once again with grace of Baba "The Miracle Book" has been released in Tamil after the release of the English and Telugu edition as posted few month back .
Sister Ashalatha had earlier communicated invitation to all Sai devotees to witness the event .she has stated thus ''I have a great news to share with all the members of our Sai family through your website on behalf of Ranadheer brother that by the grace of our AnantaKoti Rajadiraja ParaBrahma Sri Satchidananda Sadguru Sainath Maharaj "THE MIRACLE BOOK "(ARPUTHA PUTHAKAM) has been translated into Tamil language and will be blessed at the lotus feet of our Saimaharaj on the SAI BLESSED NEW YEAR-2010.

அன்பானவர்களே
ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் வெளியான சாயியின் 'அற்புதப் புத்தகம்' தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. அது வெளியாகும் முன்னரே சகோதரி ஆஷா லாதா அது பற்றிய செய்தியையும் அழைப்பு இதழையும் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருந்தார் '' உங்களுடைய இணைய தளத்தின் மூலம் ரணதீர் சகோதரர் சார்பாக நமது அனந்தகோடி ராஜாதிராஜ பரபிரும்ம ஸ்ரீ சச்சிதானந்த குரு சாயிநாத மகராஜின் அருளினால் 'அற்புதப் புத்தகம் ' தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு கவரிவாகம் சாயிபாபா ஆலயாத்தில் 01.01.2010 ஆம் தேதி பன்னிரண்டு மணிக்கு வெளியிடப்பட்டது .''
Related Posts Plugin for WordPress, Blogger...